கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் கலங்கள் ரோடு பகுதியில் புதிதாக துவங்கப்பட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு உண்டான எலக்ட்ரிக்கல் பொருள் விற்பனை செய்யும் கடையில்
நேற்று நள்ளிரவில்
திடீரென ஏற்பட்ட
மின் கசிவு காரணமாக கடையில் தீப்பிடித்து பொருட்கள் எரிந்து புகை மூட்டமாக காணப்பட்டது. இதனையரிந்த அருகில் உணவகத்தில் பணி புரியும் ஊழியர்கள் சூலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து
தீயணைப்பு நிலைய அதிகாரி ராமசுப்பிரமணியம் உத்தரவின் பேரில் துணை அதிகாரி ராஜகோபால் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து வந்து பூட்டி இருந்த கடையின் கதவை உடைத்து எரிந்து கொண்டிருந்த தீயை இரண்டு மணி போராட்டத்திற்கு பிறகு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தின் காரணமாக பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து கருகியதாக கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். மேலும்
இது தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் எலக்ட்ரிக்கல் கடையில் தீ விபத்து

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics