நாகர்கோவில் பிப் 28
குமரி மாவட்டத்தில் பள்ளி மாணவனை சக மாணவர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதை பொருள் பயன்படுத்துவதை ஒரு மாணவர் தலைமை ஆசிரியரிடம் கூறியுள்ளார்.இதனால் கோபமடைந்த சக மாணவர்கள் அந்த மாணவனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த மாணவரை ஆசிரியர்கள் மீட்டு பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்களால் சக மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.