வேலூர்_23
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நவம்பர் மாத விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்மாலதி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் திருகுணஐயப்பதுரை, வேலூர் மாவட்ட
மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் இராமதாஸ், இணை இயக்குநர் (வேளாண்மை) ஸ்டீபன் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தேன்மொழி, மாவட்ட உதவி வன பாதுகாவலர் மணிவண்ணன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், மாவட்ட அளவிலான விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.