திண்டுக்கல் மாங்கரைப்பிரிவு எம். அம்மாபட்டியில் உள்ள மீனாட்சி கல்விகுழுமத்தின் சார்பாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மீனாட்சி அறக்கட்டளையின் தலைவர்
V.சின்னதுரை, மற்றும் செயலாளர் S. பாண்டியன் மற்றும் உறுப்பினர்கள் .V.குருசாமி, A.முருகேசன், J. அற்புதம் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மீனாட்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்
S.B.சத்தியமூர்த்தி, மீனாட்சி கல்வியியல் கல்லூரியின் முதல்வர் S.பழனிமுருகன், மீனாட்சி மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் G.ராமராஜ், மீனாட்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் V.ரமேஷ், மீனாட்சி அறக்கட்டளையின் நிர்வாக அலுவலர்
K . ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மீனாசி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் மீனாட்சி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழாவை சிறப்பித்தார்கள்.