நாகர்கோவில் செப் 14
குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள மருங்கூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் இவர் தற்பொழுது சுசீந்திரம் கவிமணி நகர் முதல் தெருவில் வசித்து வருகிறார். இவரது மகன் கவின் வயது 25 இவர் பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வந்தார். கவின் தனது படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை என பெற்றோரிடம் கூறி வந்தாராம் சம்பவத்தன்று அவர் வீட்டின் படுக்கை அறையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த பெற்றோர் கவினை மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் மீண்டும் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து அவரது தந்தை சுந்தரம் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதம் அலி, சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.