செப்.5
தேசிய வனவிலங்கு தினத்தை முன்னிட்டு இன்று 04.09.24 திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக் கோட்டம் இணைந்து நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் பறைவைகள் நோக்கல் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். வனவர் வெங்கடாசலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் கூறுகையில் மாணவர்கள் பறவைகள் நோக்கல் மற்றும் கணக்கீடு செய்வதற்கு முன் வரவேண்டும். வனவிலங்குகளின் வாழ்விடங்களைப் பாதுகாத்தல் மற்றும் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை மாணவர்கள் ஏற்படுத்த வேண்டும், வனவிலங்குகள் நமது சுற்றுச்சூழல் அமைப்புகளின் நுட்பமான சமநிலையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது, ஆகையால் வனவிலங்குகளை துன்புறுத்தல் கூடாது, வனச்சுற்றுலா செல்லும் போது விலங்குகளுக்கு உணவுகளை வழங்குவதை தவிர்க்க வேண்டும் மேலும் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்ல கூடாது, அவற்றால் விலங்குகளுக்கு நிறைய பாதிப்புகள் ஏற்படுகிறது, பறவைகளை எவ்வாறு கண்டறிந்து கணக்கீடு செய்ய வேண்டும் என்று விளக்கினார். பிறகு மாணவ செயலர்கள் மது கார்த்திக், கிருஷ்ணமூர்த்தி, நவீன்குமார் ஆகியோர் தலைமையில் சரணாலயத்தில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றினார்கள். நிகழ்வில் வனச்சரக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்விற்கான ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் செய்திருந்தார்.