தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் ஏரிகளுக்குநீர்வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் கட்டுப்பாட்டில் 74- ஏரிகளும், ஊரக வளர்ச்சித் துறையும் கட்டுப்பாட்டில் 546- ஏரிகளும், பேரூராட்சி பகுதியில் – 14 ஏரிகளும் மொத்தம் 634- ஏரிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல முடியாமல் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும், பொது இடங்களுக்கும் தண்ணீர் சென்று தேங்கும் நிலை உருவாகியுள்ளது.உடனே ஏரிகளியில் உள்ள ஆக்கிரமிப்புகள்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி நகர எல்லையில் கிருஷ்ணகிரி சாலையில் ராமக்காள் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்த ஏரியின் பரப்பளவு சுமார் 265-ஏக்கரில் உள்ளது. நல்லம்பள்ளி ஒன்றியம், அதியமான் கோட்டை, கோடியூரில் உள்ள ஏரி மழைநீர் வரத்தால் நிரம்பி உள்ளது. இந்த ஏரியின் பரப்பளவு சுமார் 360-ஏக்கரில் உள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள பல ஏரிகளும் நிரம்பி உள்ளது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கன மழை பெய்து வருவதால் ஏரிகளுக்குநீர்வரத்து

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics