அரியலூர்,ஜூன்:30
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த அகரம் கிராமத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற அருள்மிகு திரௌபதி அம்மன் கோவிலின் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
இதில் பெரியவர்கள் சிறியவர்கள் ஆண்கள் பெண்கள் மற்றும் தங்களது குழந்தைகளை தோளில் சுமந்து தீ மிதித்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். இக்கோயிலில் இந்த திருவிழா சில நாட்களுக்கு முன்பு கோலாகல கொடி ஏற்றத்துடன் துவங்கிய திருவிழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், திரவுபதி அம்மன், தருமர், பீமன், அர்ஜுனர், நகுலன், சகாதேவன், கிருஷ்ணர், அரவான் ஆகிய தெய்வங்களுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, வீதி உலாவும் நடைபெற்றது.
இவ் விழாவில்
புகழ்பெற்ற பூசாரிகளை கொண்டு மகாபாரத பஞ்சபாண்டவர்கள் கதையை படித்து தருமர் பிறப்பு, அர்ச்சுனன் பிறப்பு, அம்மன் பிறப்பு, அர்ச்சுனன் வில் வளைத்தல், அர்ச்சுனன் மாடு விரட்டுதல், திரௌபதி திருமணம் , பூச்செறிதல், அரவான் கடபலி உள்ளிட்ட 18 நாட்கள் நடந்த மகாபாரத போர் தினத்தை மண்டகப்படியாக அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒவ்வொரு வகையறாக்களும் திருவிழாவாக கொண்டாடி இறுதி நாளன்று திரௌபதி அம்மனுக்கு வேண்டுதல்படி தீ மிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
முன்னதாக காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் நந்தா தேவன் குளம்ஏரிக்கரையில் இருந்து , பூங்கரகத்துடன் பம்பை, மேளம் நாதஸ்வரம் மங்கல இசையோடு முக்கிய வீதி வழியாக வந்த பக்தர்கள் கோவில் அருகே அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தை சுற்றி வலம் வந்து, அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தினர். இதைத்தொடர்ந்துதீ மிதித்து பின்பு சாட்டையடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர் இந்த திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்த கோடிகள் கலந்து கொண்டு அம்மனின் அருள் ஆசி பெற்றுச் சென்றனர்.