சுசீந்திரம்.மார்ச்.30
மேலகிருஷ்ணன்புதூரில் இராஜாக்கமங்கலம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலை உறுதி திட்ட நிதி ரூ.4000 கோடியை தமிழ் நாட்டிற்கு தராமல் ஏழை, எளியோர் வயிற்றில் அடிக்கும் மோடி அரசை கண்டித்து இராஜாக்கமங்கலம் தெற்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலகிருஷ்ணன்புதூர் சந்திப்பில் வைத்து நேற்று காலை 10 மணிக்கு ஒன்றிய கழக செயலாளர் ஆ.லிவிங்ஸ்டன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய கழக நிர்வாகிகள், கழக அணிகளின் அமைப்பாளர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள், கழக தொண்டர்கள்,100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் சம்பளம் கிடைக்காத ஏழை மக்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics