தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் பொறுப்புக்கான நேர்காணல் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வைத்து இன்று ஏப்ரல் 5 ம் தேதி மதியம் 2 மணிக்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில் நடைபெறுகிறது. மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் சரவணகுமார், சங்கர், விஜயகுமார், ரமேஷ், பாஸ்கர் சிங், முன்னிலை வகிக்கின்றனர் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பசுபதி பாண்டியன் வரவேற்புரை ஆற்றுகிறார். மாவட்ட பொறியாளர் அணி தலைவர் சங்கர் தொகுத்து வழங்குகிறார்.இதில் பொறியாளர் அணி மாநில துணை செயலாளரும், நெல்லை மண்டல பொறுப்பாளருமான ராஜவர்மன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கின்றார். முடிவில் பொறியாளர் அணி மாவட்ட துணை தலைவர் செண்பக குற்றாலம் நன்றி கூறுகிறார். இந்த நேர்காணலில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி ஒன்றிய,நகர, பேரூர் கழக அமைப்பாளர் துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு கியூ ஆர் கோடு மூலம் பதிவு செய்த அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது.
திமுக பொறியாளர் அணி பொறுப்பாளர்கள் தேர்வு

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics