புதுக்கோட்டை மாநகராட்சி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், ஒருங்கிணைக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின்கீழ், ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலக வளாகக் கட்டட கட்டுமானப் பணியினை, அமைச்சர் எஸ்.ரகுபதி அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா தலைமையில் அடிக்கல்நாட்டி துவக்கி வைத்தார்கள். உடன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல் மேயர் திலகவதி செந்தில் செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) பொறி.பரமசிவம், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கே.ஸ்ருதி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்