திண்டுக்கல் மாவட்ட காவல்துறை
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.15,000/- அபராதமும்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை காதலித்து ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நத்தம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ்(24) என்பவரை நத்தம் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், அறிவுறுத்தலின்படி நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் நீதிமன்ற தலைமை காவலர் கருணாகரன் மற்றும் அரசு வழக்கறிஞர் ஜோதி சீரிய முயற்சியால் திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி குற்றவாளி தர்மராஜ் என்பவருக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.15,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
மேலும் இந்த ஆண்டு இதுவரை 08 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.