தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆ. மணி எம்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது. தமிழக முதல்வர் தனது சட்டம் போராட்டத்தால் மீட்டெடுத்த 10 மசோதாக்களில் தமிழ்நாடு மீன் வளப்பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயரை வைக்கும் மசோதாவும் ஒன்று அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அந்த மசோதாவையும் பாதுகாத்ததன் மூலம் கட்சி எல்லைகளை கடந்து உண்மையான தலைவர் என்று நிரூபித்திருக்கிறார் தமிழக முதல்வர்.ஆளுநர் மூலம் ஒன்றிய ஆட்சி யாளர்கள் செய்த சர்வாதிகாரத்தை தடுத்து மாநில உரிமையை முதல்வர் நிலைநாட்டியுள்ளார். மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயித்து உச்சநீதிமன்றம் வழங்கி யுள்ள இந்த தீர்ப்பு மூலம் கேரளா, மேற்கு வங்களம், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நீண்ட நாட்கள் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது நகர செயலாளர் நாட்டான் மாது, ஒன்றிய செயலாளர் சண்முகம், நிர்வாகிகள் முல்லவேந்தன், நடராஜ், சுருளி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தருமபுரி திமுக பொறுப்பாளர் ஆ.மணி எம்பி

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics