நாகர்கோவில் மார்ச் 14
கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் தேவைகளுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கலைஞரின் கனவு இல்ல வீடுகள் கட்டபட்டு வருகின்றன.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் ஊராட்சிஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் கலைஞரின் கனவு இல்லத்திட்டத்தின் (KKI) 2024-25 கீழ் கட்டப்பட்டுள்ள வீடு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது பூச்சு வேலைகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜானா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பணிகளை தரமானதாகவும், உறுதித்தன்மையுட அமைந்திட வீட்டின் பயனாளி மற்றும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் மேலசங்கரன்குழி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை கூடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மக்கும் குப்பை மக்கா குப்பைகள் 61601 உரிய முறையில் தரம் பிரித்து, உரம் தயாரிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நடைபெற்ற ஆய்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் முருகன். வட்டார வளர்ச்சி அலுவலர், பணியாளர்கள். பயனாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.