கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் ஏரியின் மையப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் இருப்பதாக மத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அழுகிய நிலையில் இருந்த உடலை மீட்டனர். அப்போது மூக்காகவுண்டனூர் கிராமத்தை சேர்ந்த அறிவழகன் (35) என்பது தெரிய வந்தது. மூட்டை தூக்கும் தொழில் செய்து வரும் இவர் கடந்த 20ம் தேதி முதல் வீடு திரும்பாத நிலையில், இன்று மத்தூர் ஏரிக்கரை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உடலை மத்தூர் அரசு பொது மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மத்தூர் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்தூர் ஏரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics