திண்டுக்கல் ஜூன்: 16
திண்டுக்கல் முகிழம் அகாடமியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த வருடமும் முழுவதும் குருதி கொடுத்த கொடையாளர்களை வாழ்த்தி நினைவு பரிசுகளை திண்டுக்கல் செஞ்சிலுவை சங்கம் சார்பாக கொடுக்கப்பட்டது. இதில் கண்ணன் என்பவர் 27 முறை இரத்த தானம் கொடுத்துள்ளார் . இந்நிகழ்வில் செஞ்சிலுவை சங்க மாவட்ட சேர்மன் டாக்டர். நாட்டாண்மை என்.எம்.பி. காஜாமைதீன், துணைத் தலைவர் ஷேக் தாவூது, செயலாளர் அபுதாகிர், பொருளாளர் சுசிலாமேரி, பொதுக்குழு உறுப்பினர் ராஜகுரு, செஞ்சிலுவை சங்க வாழ்நாள் உறுப்பினர் எ.ஜெயசீலன், தொன்போஸ்கோ கல்லூரியின் அதிபர்
அருட்தந்தை டோமினிக் பெர்னாட்ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இரத்த தானம் வழங்கிய 150 – க்கும் மேற்பட்டவர்களுக்கு நினைவு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை முகிழம் அகாடமியின் நிர்வாக இயக்குனர் டாக்டர்.எம். ராஜேஸ்வரி சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்தனர்.