மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் சந்திர சாப விமோசன தலமான திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 ஆவது திவ்யதேசமாகவும், பஞ்ச அரங்க தலங்களில் ஐந்தாவது தலமாகவும் உள்ளது. இந்த ஆலயத்தின் அருகில் கீழவீதியில் இறைச்சி கடை இயங்கி வருகிறது. மேலும் அங்குள்ள கழிவுகளை அருகிலேயே கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமல்லாமல் தெருநாய்களும் இழுத்து சென்று குடியிருப்பு பகுதிகளில் நடுவில் போட்டுகிறது. இதனால் அருகில் உள்ள பள்ளி மாணவர்கள், குடியிருப்புவாசிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்த பட்ட கறிக்கடையை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு அந்த இடத்திலிருந்து கறிக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாவட்ட துணை தலைவர் மோடி.கண்ணன் ஆன்லைன் மூலம்
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மனு அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆன்லைன்- பா.ஜ.க மாவட்ட துணைதலைவர் மனு

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics