ராமநாதபுரம், நவ.7-
கள்ளக்குறிச்சி மாவட்டம் , தியாகதுருகம் வட்டம் , புக்கலம் கிராமம் , பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த சேர்ந்த ஐயப்பன் என்பவர் சவுதி அரேபியா ரியாத்தில் கட்டுமான பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 27- 10- 2024 ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் தங்கி இருந்த அறையில் மரணம் அடைந்தார், இந்த தகவலை இறந்து போன ஐயப்பனின் உறவினர் கஜேந்திரன் அவர்கள் ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் மண்டல தலைவர் மீமிசல் நூர் முஹம்மது அவர்களை தொடர்பு கொண்டு இறந்து போன ஐயப்பனின் உடலை தாயகத்திற்கு அனுப்பி வைக்க உதவி செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து மண்டல தலைவர் ரியாத் மண்டல சமூகநலத்துறைக்கு தகவல் கொடுக்க தகவலைப் பெற்றுக் கொண்ட ரியாத் மண்டல சமூக நலத்துறை செயலாளர் கொடிப்பள்ளம் சாதிக் பாஷா அவர்கள் விரைந்து செயல்பட்டு இந்திய தூதரகத்தின் உதவியுடன் அனைத்து பணிகளையும் முடித்து கடந்த 4/11/2024 , திங்கட்கிழமை இரவு ரியாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கை வழியாக திருச்சி விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நவ.5 ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி அளவில் திருச்சி விமான நிலையத்திற்கு சென்றடைந்த ஐயப்பனின் உடலை திருச்சி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஐயப்பனின் உறவினர்கள் ஐயப்பனின் உடலை பெற்று தமுமுக ஆம்புலன்சின் மூலம் ஐயப்பனின் சொந்த ஊரான கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் வட்டம் புக்கலம் கிராமத்தில் இருக்கக்கூடிய அவர்களுடைய இல்லத்தில் கொண்டு போய் சேர்த்தனர்.
ஐயப்பனின் உடலை பெற்றுக் கொண்ட அவர்களுடைய உறவினர்கள் ஐயப்பனின் உடலை சவுதி அரேபியா ரியாத்தில் இருந்து எங்கள் வீடு வரை கொண்டு வந்து சேர்த்த இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் & மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகளுக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள்.
இந்த ஒப்பற்ற பணிக்கு வளைகுடா பொறுப்பாளர் மாநில பொருளாளர் பொறியாளர் சபியுல்லா கான், IWF மண்டல இணைச்செயலாளர் திருக்கோவிலூர் ஷாக்கீர் பேக், சமூகநலத்துறை துணைச் செயலாளர் காட்டுவா அஜ்மீ அவர்களும் , திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் ராஜா முஹம்மது, கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் பசல் முஹம்மது, கள்ளக்குறிச்சி மாவட்ட மமக செயலாளர் முகமது அலி, கள்ளக்குறிச்சி மாவட்ட தொண்டரணி செயலாளர் நிஷாத் உசேன் புகாரி , நகரத் தலைவர் சையது சைஃப் , தமுமுக நகர செயலாளர் சையது ஹயும் , தமுமுக துணை செயலாளர் செளகத் அலி , மமக துணை செயலாளர் ஷேக் சுபி , நகர பொருளாளர் ஷாகுல் ஹமீது, தொண்டரணி சையது அனிஸ், தொண்டரணி சப்தர் அலி , தொண்டரணி அஸ்லம் உள்ளிட்டோர் உடன் இருந்து உதவினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.