கோவை செப்: 19
கோயம்புத்தூர் 100 அடி சாலை, ஜிபி சிக்னலில் அலெர்ட் தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் போர்ட் மோட்டார் கம்பெனியும் இணைத்து, கோயம்புத்தூர் மாநகரக் காவல் உதவியுடன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் போர்டு மோட்டார் கம்பெனி ஊழியர்கள், பி.எஸ். ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த அலெர்ட் கோல்டன் ஆர்மி தன்னார்வ தொண்டர்கள் இணைந்து சாலையில் ஹெல்மெட், சீட்பெல்ட் அணிந்த நபர்கள் மற்றும் பிற சாலை விதிகளை கடைபிடித்த நபர்களுக்கு இனிப்புடன் சேர்ந்த வாழ்த்து மடல்கள் கொடுக்கபட்டது. சாலை விதிகளை கடைபிடிக்காத நபர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் அடங்கிய குறிப்புகள் வழங்கபட்டது. குறிப்பாக எமதர்மன் மற்றும் சித்ரகுப்தன் தோற்றத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது எளிதாக விளங்கும் வண்ணம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.