திருவள்ளூர் மாவட்டத்தில்
தமிழ்நாடு முதலமைச்சர் 2024 கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 10 தேதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் ஓட்டப்பந்தயம் நீச்சல் கிரிக்கெட் கால்பந்து கபடி ஆக்கி பளு தூக்குதல் உள்ளிட்ட போட்டிகள்
இடம் பெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கு திருவள்ளூர் அடுத்த பட்டரை பெரும்புதூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் கலந்து கொண்டு
போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது
மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிரபுசங்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன், துரை சந்திரசேகர், ஆவடி மேயர் உதயகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சேதுராஜன், ஆர்.டி.ஓ கற்பகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள், அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.