திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக
திண்டுக்கல் MSP. சோலை நாடார் நினைவு மேல்நிலைப்பள்ளியில் இன்ட்ராக்ட் கிளப் பதவியேற்பு விழா, கல்வி, மற்றும் விளையாட்டு விருது வழங்கும் விழா.
திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் சார்பாக இன்ட்ராக்ட் கிளப் பதவியேற்பு விழா,கல்வி மற்றும் விளையாட்டு விருது வழங்கும் விழா நிகழ்ச்சி திண்டுக்கல் MSP. சோலை நாடார் நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn.H.புருஷோத்தமன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் செயலாளர் Rtn.P.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக திண்டுக்கல் MSP. சோலை நாடார் நினைவு மேல்நிலைப்பள்ளியின் தாளாளர்
P.முருகேசன்,
மேற்கு ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் Rtn.V.T.R.T.நாகராஜன்,திண்டுக்கல் MSP. சோலை நாடார் நினைவு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) C.கருணாகரன், திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் துணை ஆளுநர் Rtn. M.செல்வகனி, இன்ட்ராக்ட் கிளப் சேர்மன் ரோட்டரியன் Dr.M. சிவராமன்
மேற்கு ரோட்டரி சங்கத்தின் நிர்வாகி
Rtn. இருதயராஜா, Rtn.B.செந்தில்குமார். Rtn. மதன்மோகன்,
Rtn. M.S.மாணிக்கம்
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கும், சிறந்த ஆசிரியர்களுக்கும்,
பள்ளிக்கு தொடர்ந்து விடுமுறை போடாமல் வந்த ஆசிரியர்களுக்கும், ஆசிரியைகளுக்கும் பரிசுகளை வழங்கினார்கள். அதனை தொடர்ந்து இன்ட்ராக்ட் கிளப்பின் தலைவராக பள்ளி மாணவர் B.கார்த்திக் பாண்டி, செயலாளராக பள்ளி மாணவர் R.செல்வகுமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் MSP சோலை நாடார் நினைவு மேல்நிலைப்பள்ளியின் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், மேற்கு
ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியின் முடிவில் இன்ட்ராக்ட் கிளப் ஒருங்கிணைப்பாளர் S.ஜெயராமன் நன்றி கூறினார்.