கோவை ஜன: 03
கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்தும் “எப்போ வருவாரோ-2025” நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் தொடர்ந்து 8 நாட்கள் நடைபெறும் அந்த வகையில் 2025 ஆண்டின் முதல் நாள் விழா கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
பல்லாண்டுகளாக ஆன்மீக தொண்டாற்றி வரும் அன்பர்களுக்கு “அருள் வளர் செம்மல் விருது” வழங்கப்பட்டது. அந்த வகையில் அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவில் குடமுழுக்கு சிறப்பாக நடத்தியதும், சிதளம் அடைந்த கோவில்களை புணரமைத்தும், தெய்வ திருமேனிகளுக்கு ஆபரணம் அணிவித்து வழிபாட்டு கோயில்களாக மாற்றியும், பல்வேறு பொள்ளாச்சி சுற்றுவட்டார கோயில்களின் திருப்பணிகள் செய்து வரும் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் எஸ். முரளிகிருஷ்ணன் அவர்களின் ஆன்மீகப் பணியைப் பாராட்டும் வண்ணம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
திருப்பூர் ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணசுவாமி திருக்கோயிலைச் சார்ந்த கார்த்திகேயன், சேக்கிழார் புனித பேரவையைச் சார்ந்த மூர்த்தி, சரவணம்பட்டி ஸ்ரீ கரி வரதராஜ சுவாமி திருக்கோயிலை சார்ந்த நாகராஜன், குருக்கள்பட்டி கடைமடை அய்யனார் கருப்பசாமி கோயிலை சார்ந்த முருகேசன் ஆகியோருக்கும் இவ்விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஸ்ரீ ராமானுஜர் குறித்து பேச்சாளர் பாரதி பாஸ்கர் சிறப்புரை நிகழ்த்தினார். பி.கே கிருஷ்ணராஜ் வானவராயர் மற்றும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஸ்ரீ கிருஷ்ணன், விஜயா வேலாயுதம், மரபின் மைந்தன் முத்தையா, இசைக்கவி ரமணன் உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்களுடன் பெருந்திரளாக பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.