மதுரை மார்ச் 30,
மதுரை மாநகராட்சி மண்டலம்-5, வார்டு 74 பழங்காநத்தம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா பேருந்து நிறுத்த புதிய நிழற்குடை மற்றும் புதிய பேருந்துகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் ஆகியோர் உடன் உள்ளனர்.