தருமபுரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் கூட்டரங்கில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள் அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்றது. தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான கலை திருவிழா போட்டிகள் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது. மாநில அளவிலான போட்டிகளில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 17 மாணவர்கள் வெற்றி பெற்றனர். இந்த மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சதீஷ் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.