திண்டுக்கல் ஜீன் :05
பாக்சிங் போட்டியில் பல தங்கப் பதக்கங்களைப் பெற்ற திண்டுக்கல் மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரி மாணவி ஸ்டிக்கா ஜாஸ்மின். 21. இவர் பல பாக்ஸிங் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். பஞ்சாபில் கடந்த 2021ஆண்டு மற்றும் 2023 ஆண்டு நடந்த கால் இறுதி போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
மேலும் பாண்டிச்சேரி மற்றும் டெல்லியில் நடந்த மாநில அளவிலான போட்டியில் தங்கம் வென்றார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் பங்கேற்று தங்கம் வென்றார். கிருஷ்ணகிரியில் நடந்த மாநில அளவிலான போட்டியில் தங்கம் வென்றார். தொடர்ந்து தங்கம் வென்ற தங்க மங்கையான ஸ்டிக்கா ஜாஸ்மினுக்கு இன்று பாராட்டு விழா நடைபெற்றது. தேசிய ஹாக்கி விளையாட்டு வீரர்,மனிதநேய வி.ஞானகுரு, திண்டுக்கல் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்க மாவட்ட செயலாளர் வெ.இராஜகோபால், திண்டுக்கல் விளையாட்டு வீரர்கள் யூனியன் தலைவர் ஏ.வி.முகமது சுல்தான், துளிர் அறக்கட்டளை நிறுவனர் ஜீவானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து மாணவி ஸ்டிக்கா ஜாஸ்மின் கூறியதாவது:
திண்டுக்கல்லில் மனிதநேய வி.ஞானகுரு, ஸ்கேட்டிங் வெ.இராஜகோபால், விளையாட்டு வீரர்கள் யூனியன் தலைவர் ஏ.வி.முகமது சுல்தான், துளிர் அறக்கட்டளை நிறுவனர் ஜீவானந்தம் போன்ற சமூக ஆர்வலர்கள் எனது விளையாட்டுக்கு ஊக்கமும் ,ஆக்கமும் அளிக்கிறார்கள். அவர்கள் பாராட்டு என்னை மேலும் வலுப்பெறச் செய்துள்ளது.
ஆசிய மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று தங்கம் வெல்வது எனது குறிக்கோளாகக் கொண்டுள்ளேன். இதற்கு கடுமையாக உழைப்பேன்,எனது வெற்றிக்கு காரணமான அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.