தென்தாமரைகுளம், டிச.5-
குமரிமாவட்டம் வடக்குதாமரைகுளம் அருகே தண்டவாளத்தில் நேற்று காலை 60 வயது மதிக்கத்தக்க தலை துண்டான நிலையில் ஆண் ஒருவர் உடல் கிடந்துள்ளது.இது குறித்து ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பிணமாக கிடந்தவர் தலை துண்டாகி நசுங்கிய நிலையில் காணப்பட்டார். இதனால் அவரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது.
பிணமாக கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்தவர் அதே பகுதியைச் சேர்ந்தவரா அல்லது வேறு ஊரை சேர்ந்தவரா, எனவும் இவர் தண்டவாளத்தை கடந்து சென்றபோது ரெயில் மோதி இறந்தாரா, அல்லது ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது தெரியவில்லை. இது குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.