குளச்சல், பிப்- 17
மண்டைக்காடு அருகே பரப்பற்று பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன் (80). இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சுப்பிரமணியன் தனது மகன் கிருஷ்ண பால் (38) என்பவர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சுப்பிரமணியன் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் வாழ்க்கையில் வெறுப்புற்ற அவர் வீட்டில் உள்ள விட்டதில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மண்டைக்காடு போலீசார் சுப்ரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக கிருஷ்ண பால் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.