அஞ்சுகிராமம் மார்ச் – 4
அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட |-வது வார்டு பரப்பு விளை கிராமத்தில் உள்ள கல்லறை தோட்டம் செடி, கொடிகள் நிறைந்து காணப்பட்டது. மேலும் சுற்று சுவர் இல்லாமல், சமூக விரோதிகளின் கூடாரமாக காட்சியளித்தது. இந்நிலையில் 1-வது வார்டு கவுன்சிலர் தனம் செல்வக்குமார், மற்றும் வார்டு பொதுமக்கள் அஞ்சுகிராமம் பேரூராட்சி செயல் அலுவலர் உஷா கிரேஸி அவர்களை சந்தித்து மனு அளித்தனர். இதனையடுத்து அஞ்சுகிராமம் பேரூராட்சி தலைவர் ஜானகி இளங்கோ தலைமையில் நடைபெற்ற பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பொது நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் சுற்று சுவர் கட்டும் பணியை செயல் அலுவலர் உஷா கிரேஸி தலைமையில், 1-வது வார்டு கவுன்சிலர் தனம் செல்வக்குமார் முன்னிலையில் அஞ்சுகிராமம் பேரூராட்சி துணை தலைவர் காந்திராஜ் அவர்கள் பணியினை தொடங்கிவைத்தார்..உடன் மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு உறுப்பினர் கதிர்வேல், வரி வசூலர் ராணி, திமுக பிரமுகர் செல்வகுமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.