பள்ளி மாணவ, மாணவியர் நலனுக்காக கூண்டுபாலம் ரோடு பணியை தற்காலிகமாக நிறுத்தாவிட்டால் அனைத்து கட்சி சார்பில் முற்றுகை போராட்டம்
அஞ்சுகிராமம் மார்ச் – 8 அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் தங்கம் நடேசன் அறிக்கையில் கூறியிருப்பதாவது
தமிழக முன்னாள் முதல்வர் காமராஜ் அவர்களால் கடந்த 1961ம் ஆண்டு கடை வரம்பு விவசாயிகள் நலன்கருதி நாஞ்சில் நாடு புத்தனார் கல்வாயில் இருந்து நிலப்பாறை சானல் வழியாக மருந்துவாழ்மலை ஆறு உருவாக்கப்பட்டது.
ஆற்றின் கீழ் அஞ்சு கிராமம் டூ நாகர்கோவில் ஹைவேஸ் ரோடு உள்ளது. எனவே போக்குவரத்துக்கு இடையூரு இல்லாமல் தண்ணீர் செல்ல கூண்டு வடிவத்தில் புதிய பாலம் கட்டப்பட்டது.
கருங்கற்களால் கட்டபட்ட கூண்டு பாலம் தற்போது உள்ள பொருளாதர உலகில் மிகவும் குறுகலாகவும், உயரம் குறைவாகவும் இருந்ததால் கடும் போக்குவரத்து நெருக்கடி இருந்து வந்தது. இந்நிலையில் சுமார் 2 கோடி நிதியில் அகலமான புதிய பாலம் கட்டிமுடிக்கப்பட்டது. புதிய பாலம் கட்டி திறப்பு விழா கண்டாலும் பெரும்பான்மையான பணிகள் முடிவடையாமல் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர். இந்நிலையில் நேற்று (வெள்ளி) முதல் பாலம்,ரோடு பணிகள் நடைபெறுகிறது. பணிகள் முடிவடைய சுமார் 3 மாதம் ஆகும் எனவும் கூறப்படுகிறது. பாலப்பணிகள் நடைபெறுவதால் அஞ்சு கிராமம் மார்க்கமாக இயக்கப்படும் அனைத்து வாகனங்களும் நாகர்கோவிலில் இருந்து சுசீந்திரம், வழக்கம்பாறை, மயிலாடி ஆராட்டுமடம், ஒசரவிளை, பொற்றையடி வழியாகவும், மறுமார்க்கத்தில் அஞ்சுகிராமத்திலிருந்து அழகப்பபுரம், பொட்டல் குளம், கொட்டாரம் வழியாக மயிலாடி, வழக்கம்பாறை, நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பத்தாம் வகுப்பு, 11-ம் வகுப்புக்கு இறுதி தேர்வுகள் நடந்துவருகிறது. கிராமபுறங்களில் உள்ள மாணவ, மாணவியர் பெரும்பாலும் நாகர்கோவில், மற்றும் சுசீந்திரம், மயிலாடி பகுதிகளில் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த திடீர் போக்குவரத்து மாற்ற அறிவிப்பால் மாணவ, மாணவியர் மிகவும் பாதிக்கப்படுவர். மேலும் படிப்பில் கவனம் செலுத்த முடியாமலும், குறிப்பிட்ட நேரத்திற்கு பரீட்சைக்கு செல்லமுடியாமலும் தவிப்புக்கு உள்ளாவர்கள். மேலும் பயணதூரமும், பணசெலவும், மனதளவில் மன உளைச்சலுக்கும் உள்ளவர்கள். எனவே மாணவ, மாணவியர் நலனை கருத்தில் கொண்டும் பால பணியை தேர்வு முடியும்வரை தள்ளிவைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அனைத்து கட்சிகள், சமுதாய அமைப்புகள், மாணவ அமைப்புகள், பொதுமக்கள், மாணவ, மாணவியர் என அனைவரும் ஒன்றினைந்து மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் தங்கம் நடேசன் கூறியுள்ளார்