மதுரை மார்ச் 17,
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ரூபாய் 5.12 கோடி மதிப்பீட்டில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி ஆகியோர் உடன் உள்ளனர்.