கிருஷ்ணகிரி,பிப்.25- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் ஒன்றியம் புளியம்பட்டி ஊராட்சியில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் புளியம்பட்டி சமுதாய கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக துணை பொதுச்செயலாளர் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி. முனுசாமி எம்எல்ஏ கலந்துகொண்டு பூத் முகவர்கள் சரிபார்த்தல் பணி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கூட்டத்தில் பேசிய கே.பி. முனுசாமி எம்எல்ஏ வரும் சட்டமன்ற தேர்தலில் 236 தொகுதிகளிலும் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் வெற்றி பெற வேண்டும். அதற்கு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். மாவட்டச் செயலாளர், ஒன்றிய செயலாளர் வாரத்திற்கு ஒருமுறை உங்களை வந்து சந்திப்பார். நான் ஒவ்வொரு மாதமும் உங்களை வந்து நேரில் சந்திப்பேன் என்று கூறினார். கூட்டத்தில் பர்கூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன், ஒன்றிய கழக செயலாளர் ஜெயபால், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், அவைத்தலைவர் அஞ்சூர் மாதையன், அம்மா பேரவை இணைச் செயலாளர் டி.கே. திருமால் கூட்டதிற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார். ஒன்றிய கழக துணைச் செயலாளர் கஸ்தூரி சிவக்குமார் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் முல்லை ராஜா, ஒன்றிய பாசறை இணைச் செயலாளர் பி.ஆர். சிவக்குமார், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் வைரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் புளியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிளைகளாக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
ஊராட்சியில் அதிமுக பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics