கிருஷ்ணகிரி,நவ.29- கிருஷ்ணகிரி மத்திய மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட கழக செயலாளர் கே.எஸ். அறிவழகன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தலைமை நிலைய செயலாளர் டி.ஆர். ராஜேந்திரன், ஆட்சி மன்ற குழு தலைவர் ஆர்.ஆர். முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி குறித்தும் வரும் சட்டமன்றத் தேர்தலில் 2026 இல் டிடிவி தினகரன் தலைமையில் ஆட்சி அமைய பாடுபட வேண்டும் என்றும் டிடிவி தினகரன் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும், அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜை செய்து அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் மூர்த்தி, மாவட்ட பேரவை செயலாளர் கில்பர்ட், பொதுக்குழு உறுப்பினர் மாதையன், கிருஷ்ணகிரி நகர செயலாளர் அசோக்குமார், ஒன்றிய கழக செயலாளர்கள் துரைசாமி, ராகவன், சூளகிரி ஒன்றிய செயலாளர் முனியப்பன், காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் நவீன்குமார், மாவட்ட அவைத் தலைவர் சீனிவாசன், நகர செயலாளர் வெங்கடேசன், சின்னராஜ், மகளிர் அணி செயலாளர் லட்சுமி, இலக்கிய அணி செயலாளர் ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிஷாந்த் உள்பட ஒன்றிய, நகர, மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics