மதுரை டிசம்பர் 13,
மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.31 கரும்பாலை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது அருகில் துணை மேயர் திரு.தி.நாகராஜன், மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் ரகுபதி, மாமன்ற உறுப்பினர் முருகன் ஆகியோர் உடன் உள்ளனர்.