திண்டுக்கல் மாவட்டம் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி, கிராம அறிவு மையக்கட்டடம் கட்டும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி சித்தையன்கோட்டை பேரூர், அழகர்நாயக்கன்பட்டி மற்றும் புதுப்பட்டி A.D காலனி ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ரூ.01.20 கோடி மதிப்பீட்டிலான கிராம அறிவு மையக்கட்டடம் (சமுதாயக்கூடம்) கட்டும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள்.மேலும் திண்டுக்கல் மாவட்டத்திலும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசின் திட்டங்கள் அனைத்தும் கடைக்கோடி மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் நிருபித்துக்காட்டியுள்ளார். சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், சோஷியலிஷத்தை நிறைவேற்றியுள்ளார் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
மேலும் இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.