கன்னியாகுமரி பிப் 15
கன்னியாகுமரி அருகேயுள்ள மகாதானபுரம் நேதாஜி காலனி பகுதியைச் சோ்ந்தவா் பகவதியப்பன்(47) காா் ஓட்டுநா். இவா் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமியை வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தாராம்.
இது குறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் கன்னியாகுமரி அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து பகவதியப்பனை கைது செய்தனா்.
நாகா்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை நீதிபதி சுந்தரையா விசாரித்து, பகவதியப்பனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீா்ப்பளித்தாா்.