நாகர்கோவில் ஏப். 23:
நாகர்கோவில் இடலாக்குடி லாலா விடை பகுதியை சேர்ந்தவர் பைசல் நிசதார் (47) வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த இரு வருடங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த பைசல் நிசதார் சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வந்தார். இவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கடனை திரும்ப செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த பைசல் மிசதார் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த போது விஷம் குடித்தார். பின்னர் தனது சகோதரிக்கு போன் செய்து உடல்நிலை சரியில்லை என்று தெரிவித்துள்ளார். இதை அடுத்து அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பைசல் மிசதார் விஷம் குடித்தது தெரியவந்தது. உடனடியாக அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவு இருந்த பைசல் மிசதார் நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.