ஈரோடு ஏப் 13
ஈரோடு மாவட்ட ஆட்சி தலைவர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947 மற்றும் விதிகள் 1948-ல் விதி 15-ன்படி தமிழில் வைக்கப்பட வேண்டும். இதேபோல் உணவு நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழ்நாடு உணவு நிறுவனங்கள சட்டம் 1958 மற்றும் விதிகள் 1959-ல் விதி 42(பி)-ன் படி தமிழில் வைத்திருக்க வேண்டும். தொழிற்சாலைகள் சட்டம் 1948 மற்றும் விதிகள் 1950 விதி 113-ன்படி அனைத்து தொழிற்சாலைகளிலும் மேற்கண்ட விதி முறைகளுக்கு உட்பட்டு தமிழில் பெயர் பலகை வைக்கப்பட வேண்டும். மேலும் இந்த பெயர் பலகையானது தமிழில் முதன்மையாகவும், பின் ஆங்கிலத்திலும் அதன் பின்னர் அவரவர் விரும்பும் மொழிகளிலும் அமைக்கப்பட வேண்டும்.
2025 மே 15 க்குள் தமிழ் பெயர் பலகைகள் வைப்பதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுளளது. அதன் பின்னர் தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களை ஆய்வு செய்து விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.
எனவே, அனைத்து கடைகள், வணிக சங்கங்கள், உணவு நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக சங்கங்கள் தங்கள் குழு உறுப்பினர்களுக்கு இந்த தகவலைத் தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி பெயர் பலகையானது தமிழில் முதன்மையாகவும், பின் ஆங்கிலத்திலும் அதன் பின்னர் அவரவர் விரும்பும் மொழிகளிலும் அமைக்கப்படுவதை, இதன் மூலம் 100 சதவீதம் உறுதி செய்வதுடன், அபராதத்தை தவிர்க்க வேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .