நாகர்கோவில் ஏப் 02,
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.இரா.ஸ்டாலின் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குட்கா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் திருமால்புரம் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மனைவி சாந்தி(50) என்பவரிடமிருந்து 48 கிலோ எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்து, அவர்களை கைது செய்தனர்.
மேலும் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யும் குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்து வருவது குறிப்பிடத்தக்கது.