மதுரை மார்ச் 30,
மதுரை ரயில்வே ஜங்ஷன் பகுதியில் மதுரை மேனேஜ்மென்ட் அசோசியேஷன் சார்பில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு மன அழுத்த மேலாண்மை சிறப்பு வகுப்பு நடைபெற்றது. இதில் நேர மேலாண்மை குறித்தும் சாலை போக்குவரத்து குறித்தும் திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி விழிப்புணர்வு வழங்கினார். உடன் மதுரை மேனேஜ்மென்ட் அசோசியேசன் தலைவர் சண்முகசுந்தரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.