திண்டுக்கல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் அங்கீகார வெற்றி விழா மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 29.03.2025 அன்று மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் ஒருங்கிணைக்கும் மாநில மாநாடு சிறப்பு செயற்குழு கூட்டமானது மரியநாதபுரம் சமுதாயக்கூடத்தில் மகளிர் அணி மாவட்ட செயலாளர் க.சவரியம்மாள் தலைமையில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாநகர் மாவட்ட செயலாளர் க.மைதீன் பாவா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட அமைப்பாளர் பாபு முன்னிலை வகித்தார். தொகுதி செயலாளர் பெர்னா, இருதயராஜ் மாவட்ட அமைப்பாளர் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை, மருதுபாண்டி மாவட்ட துணை அமைப்பாளர் வழக்கறிஞர் அணி, சாகுல் ஹமீது நகரச் செயலாளர், சின்னராஜ் மாவட்ட அமைப்பாளர் கலை இலக்கிய பேரவை மற்றும் இரா.ஜெ.திவ்யா மாவட்ட துணைச் செயலாளர் மகளிர் அணி திண்டுக்கல் மாநகர் மாவட்டம் செயற்குழு கூட்டத்தை ஒருங்கிணைத்தார். மேலும் பல முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மகளிர் அணி சார்பில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics