நெல்லை தென்காசி, சங்கரன்கோவில் & மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்
தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை.
தெற்கு ரயில்வே பொது மேலாளர்
ஆர். என். சிங்கை நேரில் சந்தித்து சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா அளித்த தென்காசி மாவட்ட ரயில்வே கோரிக்கைகளை அடங்கிய மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
கடந்த இரண்டு ஆண்டுகளாக தென்காசி, சங்கரன்கோவில் வழியாக இயங்கி வந்த நெல்லை – மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும், மீட்டர் கேஜ் காலத்தில் தென்காசி வழியாக இயங்கி வந்த நெல்லை – கொல்லம் மூன்று ஜோடி பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும், தாம்பரம் – செங்கோட்டை வாரம் மும்முறை ரயில் மற்றும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களை தினசரி இயக்க வேண்டும், தென்காசி, சங்கரன்கோவில் வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும், செங்கோட்டை – மயிலாடுதுறை மற்றும் செங்கோட்டை – நெல்லை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும், தென்காசி ரயில் நிலையத்தை ரயில் முனையமாக மாற்ற வேண்டும், தென்காசி – நெல்லை ரயில் வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களின் நடைமேடையை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிக்க வேண்டும், தென்காசியில் புறவழி ரயில் பாதை அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தலைவர் பாண்டியராஜா உடன் இருந்தார்.