புதுக்கடை, மார்- 11
கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய ஊராட்சிகளை சார்ந்த 100-கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் கீழ்குளத்தில் வைத்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம் எல் ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் மாநில தலைவர் ஜோர்தான், கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் இராஜசேகரன், கிள்ளியூர் ஒன்றிய தி.மு.க செயலாளர் கோபால், கீழ்குளம் பேருராட்சி தலைவர் சரளா கோபால், கீழ்குளம் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் ராஜகிளன் மற்றும் சுகாதார துறை மருத்துவர்கள், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.