மதுரை பிப்ரவரி 18,
மதுரை திருப்பரங்குன்றம் மலை
முருகனுக்கே சொந்தம் – மத்திய அமைச்சர் பேச்சு
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கட்சி நிர்வாகிகளுடன் சென்றார். அப்போது காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி ஐந்து நபர்களுக்கு மேல் மலை மீது செல்வதற்கு அனுமதி இல்லை என கூறியதால் எல். முருகன், இரண்டு மாவட்ட செயலாளர்கள் மற்றும் ஒரு கட்சி நிர்வாகி என நான்கு பேர் மட்டும் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களை எல். முருகன் கூறுகையில், காசி தமிழ் சங்கத்தை முடித்துவிட்டு காசி விஸ்வநாதர் தரிசனம் செய்ய வந்திருக்கிறேன். காசிக்கும் திருப்பரங்குன்றத்திற்கும் எவ்வளவு ஒற்றுமை என பார்க்க வேண்டும். நமது ஊரிலிருந்து காசிக்கு போவதை லட்சியமாகவும், வட இந்தியாவில் இருப்பவர்கள் ராமேஸ்வரம் வருவதை இலட்சியமாகவும் வைத்திருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் குப்பை கூளங்கள் பராமரிப்பே இல்லை. பக்தர்களுக்கு எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. அந்த வழியையும் சரியாக பராமரிக்காமல் இருக்கிறார்கள். மலை மேல் வேல் எடுத்துச் செல்வதையும் முறையாக செய்யவில்லை என்று மக்கள் சொல்கிறார்கள். பக்தர்கள் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் மலை மீது சென்று வழிபாடு செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் மேலும் மதுரை திருப்பரங்குன்றம் மலை
முருகனுக்கே சொந்தம் என்றார்.