மார்த்தாண்டம், பிப்- 14
தக்கலை அருகே மேக்காமண்டபத்தை சேர்ந்தவர் 40 வயதான லாரி ஓட்டுநர். இவருக்கும் கேரள மாநிலம் வெள்ளறடை ப டுதயை சேர்ந்த பெண்ணுடன் கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது ஒரு 16 வயதில் மகளும் 11 வயதில் மகனும் உண்டு.
கணவன் மனைவிக்கு இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு பிரச்சனை ஏற்பட்டது. இது குறித்து அப்போது கன்னியாகுமரி மாவட்ட எல்லையோர காவல் நிலையத்தில் மனைவி புகார் அளிக்க அளித்துள்ளார். விசாரணையில் போலீசார் இருவரும் பிரிவதாக எழுதி வாங்கி உள்ளனர்.
அப்போது அந்த காவல் நிலையத்தில் பணி புரிந்த எஸ்பி தனி பிரிவு காவலருக்கும் அந்தப் பொண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது மீண்டும் அந்த தனிப்பிரிவு ஏட்டுக்கும் அந்த பொன்னுக்கும் இடையே கடும் உறவு ஏற்பட்டுள்ளதாகவும் அவரது வீட்டிற்கு அந்த ஏட்டு வந்து செல்வதாகவும் புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக மீண்டும் கணவன் மனைவிக்கு தகராறு ஏற்பட்ட நிலையில் நேற்று அந்த டிரைவர் மாவட்ட எஸ் பி -யிடம் புகார் அளித்துள்ளார். குடும்பத்தை சீரழிக்கும் தனிப்பிரிவு காவலர் மீது நடவடிக்கை எடுக்கவும் தனது இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும் என புகாரில் கூறியுள்ளார்.
புகாரை விசாரித்த எஸ் பி உடனடியாக தனிப்பிரிவு ஏட்டுவை நாகர்கோவில் ஆயுத படைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இது தொடர்பாக மார்த்தாண்டம் டிஎஸ்பி விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார். விசாரணை அறிக்கை கிடைத்ததும் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.