கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில், தேசிய குடற்புழு நீக்க முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் , அவர்கள் துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1796 அங்கன்வாடி மையங்கள், 270 துணை சுகாதார நிலையங்கள், 61 ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் 7,16,966 நபர்களுக்கு ஆல்பெண்டாசோல் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் ., அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக, தேசிய குடற்புழு நீக்க முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் , அவர்கள் துவக்கி வைத்து, மாணவியர்களுக்கு அல்பெண்டாசோல் மாத்திரைகளை வழங்கினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் ., அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில், தேசிய குடற்புழு நீக்க முகாம் நடைபெறுகிறது. விடுபட்ட குழந்தைகளுக்கான முகாம் 17.02.2025 அன்று நடைபெறும். சிறப்பாக இம்முகாமினை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1796 அங்கன்வாடி மையங்கள், 270 துணை சுகாதார நிலையங்கள், 61 ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் 1-19 வயது வரை உள்ள 5,52,417 குழந்தைகள், 20-30 வயது வரை உள்ள 1,64,549 6T60T மொத்தம் 7,16,966 நபர்களுக்கு ஆல்பெண்டாசோல் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
இம்முகாமில் 1 முதல் 19 வரையிலான சிறுவர்கள், கருவுறாத மற்றும் பாலூட்டாத 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும். இதில் 1 முதல் 2 வயது குழந்தைகளுக்கு ஆல்பெண்டாசோல் 200 மி.கி மாத்திரையும் 2 முதல் 19 வயது சிறுவர்கள் மற்றும் 20-30 வயதுடைய பெண்களுக்கு 400 மி.கி. ஆல்பெண்டாசோல் மாத்திரையும் வழங்கப்படும். இம்மாத்திரைகள் சாப்பிடுவதால் குடற்புழு முற்றிலும் நீக்கப்படும். இரத்த சோகை நோய் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு நீங்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி அதிகரிப்பு, குழந்தையின் எடை அதிகரிப்பு, பிற நோய் தொற்றுகளுக்கு எதிர்ப்பு, மேம்படுத்தப்பட்ட அறிவாற்றல், சுறுசுறுப்பாக இருத்தல் ஆகியவை மேம்பாடு அடையும்.குடற்புழு தொற்று (STH) பின்னணி உலக மக்கள் தொகையில் 24% பேர் மண் மூலம் பரவும் குடற்புழு தொற்று (STH) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். (ஆதாரம் -WHO) மொத்த உலகளாவிய தொற்றுகளில் இந்தியா மட்டும் கிட்டத்தட்ட 25% பங்களிக்கிறது (ஆதாரம்-WHO) தமிழ்நாட்டில் இப்பரவல் 25% உள்ளது. மக்கள் தொகையில் 1% பேர் திறந்த மலம் கழித்தால் கூட அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு குடற்புழு தொற்று ஏற்படலாம். தொற்றுடைய மண் மூலம் மண்ணில் விளையும் பொருட்கள் மூலம், மண்ணில் கை, கால்கள் படுவதன் மூலம் மனிதர்களுக்கு குடற்புழு தொற்று ஏற்படுகிறது.
குடற்புழு தொற்றின் அறிகுறிகள்:
பொதுவாக அறிகுறிகள் இருக்காது. கடுமையான தொற்று உள்ளவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, பலவீனம், பசியின்மை ஏற்படும். குடற்புழுக்கள் மனிதன் சாப்பிடும் சாப்பாட்டில் உள்ள இரும்பு சத்து, ஊட்டசத்து, வைட்டமின்கள் போன்றவற்றினை எடுத்துக் கொண்டு வளர்கிறது. குடற்புழு தொற்றினால் இரும்புச் சத்து இழப்பு, இரத்தசோகைக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு அதனால் உடல் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது. உருண்டைப்புழு வைட்டமின் ஏ சத்து குறைபாட்டை ஏற்படுத்துகிறது.
குடற்புழு நீக்கம் ஆல்பெண்டாசோல் மருந்தினால் குழந்தைகளின் உடல் வளர்ச்சி, குழந்தையின் எடை அதிகரிப்பு, பிற நோய் தொற்றுகளுக்கு எதிர்ப்பு, மேம்படுத்தப்பட்ட அறிவாற்றல், மன மற்றும் உடல் வளர்ச்சியுடன் குழந்தைளின் சிறந்த கற்கும் திறன், பள்ளி வருகையை அதிகரித்து, பள்ளிகளில் சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது. வாலிப வயதினர் மற்றும் பேறுகால மகளிர்க்கு சுறுசுறுப்பாக இருத்தல், பணியில் ஆர்வம், நீண்ட நேரம் வேலை செய்யும் திறன் மேம்படுகிறது.
எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை உட்கொள்ள ஊக்கம் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் ., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ரமேஷ்குமார், வட்டார மருத்துவர்கள் மரு.சுசித்ரா, மரு.ரமேஷ்குமார், மரு.அமுதவள்ளி, மரு.விமல்குமார், மாவட்ட சுகாதார அலுவலக கண்காணிப்பாளர் திரு.கண்ணன், அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் முனைவர்.சௌ.கீதா மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், செவிலியர்கள், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.