சுசீந்திரம் பிப் 9
குமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் புகையிலை ஒழிப்பு பணிகள் தீவிரம் அடைந்து உள்ளது.கன்னியாகுமரியில் சாமிதோப்பு ,பூவியூர்,பொற்றையடி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட கணேஷ் 701,கூல் லிப் புகையிலை விற்பனை மூன்று கடைகளில் கண்டுபிடிக்கப்பட்டு தென் தாமரைக்குளம் காவல் துறை மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த மூன்று கடைகளையும் உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.V.செந்தில்குமார் அவர்களின் உத்தரவுப்படி, அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் க.சக்திமுருகன் தென் தாமரைக்குளம் காவல் துறை உதவியுடன் மூடி சீல் வைத்தார்.மேலும் , புகையிலை விற்பனையில் ஈடுபட்ட மூன்று நபர்களுக்கும் தலா 25000 ரூபாய் வீதம் மொத்தம் 75,000 ரூபாய் அபராதமும் உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை மற்றும் உணவின் தரம் குறித்த புகார்களை 9444042322 என்ற வாட்சப் எண்ணிலும் தெரிவிக்கலாம் என்று கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.