தருமபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா, சிட்டா, பெயர் மாற்றம் புதிய குடும்ப அட்டை வேண்டுதல் ,வாரிசு சான்றிதழ், வேலை வாய்ப்பு, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உபகரங்கள் வேண்டியும் மொத்தம் 273- மனுக்கள் அளித்தனர். மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவர்களிடம் வழங்கி உறிய தீர்வினை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார். இந்தக் கூட்டத்தில் தாட்கோ சார்பில் 5 தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சரின் காப்பீட்டு அட்டைகளும் , 5 தூய்மை பணியாளர்களுக்கு தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தின் கீழ் 2024- 2025 ஆம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை மற்றும் திருமண உதவித்தொகை 10,500 க்காண காசோலையை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். கூட்டத்தில் டிஆர்ஓ கவிதா, தனித்துணை கலெக்டர் சுப்பிரமணி, திட்ட இயக்குனர் லலிதா, தாட்கோ மாவட்ட மேலாளர் வேல்முருகன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics