சுசீந்திரம்.ஜன.20
சுசீந்திரம் அருகே உள்ள பணிக்கன் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் பொன் ராஜா 38 இவருக்கு திருமணம் ஆகி ஷீபா என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர் இவர் ஓவியராக வேலை பார்த்து வருகிறார் இவருக்கு குடிப்பழக்கம் உடையவர் என கூறப்படுகிறது இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார் நேற்று குடிப்பதற்கு தனது மனைவியிடம் பணம் கேட்டு உள்ளார் அதற்கு தன்னிடம் பணம் இல்லை எனக் கூறி அவரது மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார் பின்பு மதியம் தனது வீட்டுக்கு வந்து பார்க்கும் பொழுது பொன் ராஜா ஏதோ விஷம் அருந்தி மயங்கிய நிலையில் கிடந்து உள்ளார் உடனடியாக அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை கொண்டு சேர்த்தனர் ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறியுள்ளனர் இதுகுறித்து அவரது மனைவி ஷீபா சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.