குளச்சல், ஜன- 10
குளச்சல் அருகே அய்யம்பாறவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் ராஜதுரை (64). சவுதி அரேபியாவில் காண்ட்ராக்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ராஜம் (60) என்ற மனைவியும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர். பிள்ளைகள் திருமணமாகி தனித்தனியாக வாசித்து வருகின்றனர்.
ராஜதுரை சவுதி அரேபியாவில் காண்ட்ராக்டர் வேலை செய்த போது அவருக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டதா கூறப்படுகிறது. இதனால் மணமடைந்த ராஜதுரை கடந்த அக்டோபர் மாதம் ஊருக்கு திரும்பினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. குடும்பத்தினர் அவரை மீட்டு ஆறுதல் கூறி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று 8-ம் தேதி அவரது மனைவி ராஜம் அறைக்குள் சென்று பார்த்த போது ராஜதுரை வாயில் நுரை தள்ளி இறந்து கிடந்தார். இது குறித்து குளச்சல் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.