சுசீந்திரம் டிச.31
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் உட்பிரகாரம் அமைந்துள்ள 18 அடி உயரம் உடைய ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஆஞ்சநேயர் சுவாமிக்கு வருடம் தோறும் ஆஞ்சநேயர் ஜெயந்தி வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு காலை 5 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமியின் முன் அமைந்துள்ள ராமபிரானுக்கு ஜோடச அபிஷேகம் நடைபெற்றது. காலை 8 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு 1000 லிட்டருக்கு மேல் பால் தயிர் நல்லெண்ணெய் வெண்ணை இளநீர் எலுமிச்சை சாறு அரிசி மாவு பழச்சாறு கரும்புச்சாறு குங்குமம் சந்தனம் களபம் ஜவ்வாது திருநீறு பன்னீர் தேன் உட்பட பதினாறு வகையான அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 12 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்கார தீபாரதனை நடைபெற்றது மாலை 6 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமியின் கழுத்துப் பகுதி வரை நறுமண பூக்களால் அபிஷேகம் நடைபெற்றது. இரவு 8 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயருக்கு அலங்கார தீபாரதனையும் நடைபெற்றது. விழாவில் தமிழக முதல்வர் மனைவி துர்க்கா ஸ்டாலின் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார் மதியம் 11 மணியளவில் அன்னதானமும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதற்கு ஒரு லட்சம் லட்டுகள் தயார் செய்து லட்டு தட்டுவடை சந்தனம் குங்குமம் திருநீறு ஆகியவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அறங்காவல் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கோவில்களின் இணை ஆணையர் ஜான்சி ராணி, கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்திருந்தனர்.